Author: கிரிஷன்
•10:21 AM
"   வைரமுத்துவிடம் இருந்து ஒரு அப்பட்டமான திருட்டு இந்தக் கவிதையின் கரு. கவிதையின்  உடலும் வரிகளும் மட்டும்  எனக்கு சொந்தமானவை.  கவிப்பேரரசுவின் விசிறிகள் தயவு கூர்ந்து என்னை மன்னிக்கவும்...இயன்றவரை அந்த மூலக் கவிதையின் நடையிலேயே எழுத முயன்றிருக்கிறேன் ."



சவரச்செலவு  சைபர் ஆகும் 
ஆகாரச்செவு அரைவாசியாகும்  
நிலவு தூங்கிய பின் நித்திரைக்கு செல்வாய் 
விடியலுக்கு முன் விழித்துக்கொள்வாய்
காதலித்துப்பார் 

உனக்குள்ளே சிரித்ததுண்டா
உலகம் உனைப்பார்த்து சிரித்ததுண்டா 
இரண்டும் நடக்கும்  
காதலித்துப்பார் 

பூவும் புல்வெளியும் 
பூமிதொடும்  வானமும் 
அத்தனை அழகில்லை என்பாய் 

விடுமுறைகள் உனக்கு விரோதியாகும் 
நீ கிறுக்குபவை கவிதை ஆகும் 
நீ மட்டும்  கிறுக்கன் ஆவாய் ..

உன் மூச்சின் உஷ்ணம்\
 உன்னைச்சுடுவது புரியும் 
இதயம் துடிப்பது அடிப்ப்தாய் தெரியும் 
கல்லூரிச்சாலைகளில்  
காத்திருந்து உன் கால் தேயும் 
காதலித்துப்பார் 

உன் சென்டுப்போத்தல்கள் 
சீக்கிரமே காலியாகும் 
செல் பேசிக்கட்டணம் 
சிகரமாய் ஏறும்

‘முகப்புத்தகத்தில்’
 நிரந்தர வாசகனாவாய் 
உன் கொச்சைத்தமிழ் நடுவே  
ஆங்கிலமும் தவழும் 
காதலித்துப்பார் 

பொறுமையில் பூமியை வேல்லவேண்டுமா
தேடலில்கூகிளை” வெல்லவேண்டுமா
காதலித்துப்பார்

விடலை வயதில் 
விரல் சூப்பிப் பழக்கம் உண்டா
ஆணாய் இருந்தும் 
நாணம் வந்ததுண்டா
நிலத்தில் நடக்கையில் மிதந்ததுண்டா 
நீரில் குளிக்கையில் வியர்த்ததுண்டா 
காதலித்துப்பார் 

குளியலறை கனவுக்கூடமாகும் 
உன் கற்பனைத்தாகம் 
கடல்  குடித்து முடிக்கும்
மோகப்பசி வெள்ளம் 
வரப்புடைக்கும்  
  காதலித்துப்பார்  

தெரிந்த இடத்திலேயே
 தொலைந்து போகலாமே 
தோற்கின்ற போதும் 
வெல்லும் சுகம் கிடைக்குமே 
இதயத்தை கொடுத்தபின்
 உயிர்வாழலாமே 
இதற்காகவேனும் காதலித்துப்பார் 

தியானம் தவம் இன்றி
 ஞானம் கிடைக்குமே 
பிரிவும் தனிமையும் துயரும்
 இனிக்குமே 
சாவே உன்னிடம் 
சரணடைந்து போகுமே  
இதற்காகவேனும் 
காதலித்துப்பார்   

புகையும், மதுவும் உனக்கு
 போதை தரவில்லையா  
சேர்த்துவைத்த செல்வம்
 சுகம் தரவில்லையா 
நீ கற்றறிந்த நூல்கள் 
உன் கண் திறக்கவில்லையா
யாதும் கிடைக்கும் 
காதலித்துப்பார்.....
|
This entry was posted on 10:21 AM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

4 comments:

On April 29, 2011 at 10:16 AM , Thusha said...

Great Chreshan,unathu kavithai aakkam menmellum valara akka n manamarntha valthukal

 
On April 30, 2011 at 1:42 PM , கிரிஷன் said...

நன்றி அக்கா ......

 
On October 28, 2011 at 12:46 PM , GT said...

Amazing lines.... பொறுமையில் பூமியை வேல்லவேண்டுமா
தேடலில் “கூகிளை” வெல்லவேண்டுமா
காதலித்துப்பார் & நீ கிறுக்குபவை கவிதை ஆகும்
நீ மட்டும் கிறுக்கன் ஆவாய் .. are my favourite and also the last paragraph... GOOD WORK BRO!!!

 
On October 30, 2011 at 7:09 AM , கிரிஷன் said...

thank you :)