என்னைப்பற்றி சொல்வதற்கு அதிகம் இல்லை...உங்களுக்கு நேரம் இன்று மிச்சமாக இருந்தால் இதையும் வாசித்து விடுங்களேன்...
இங்கு எழுதுவதற்கு நான் சாதித்தவை என்று எதுவும் கிடையாது ஆனால் சாதிக்கக் கனவுகண்டுகொண்டிருப்பவை ஏராளம்....ஏராளம்.அவற்றை எழுத இங்கு இடமும் போதாது..
. விஞ்ஞானம் ,விளையாட்டு, இலக்கியம் , அரசியல் எல்லாக் கடல்களிலும் கரையில் நின்று கால் நனைத்ததுண்டு ..அனால் எதிலும் ஆழம் கண்டதோ காண முனைந்ததோ கிடையாது.இந்தக் கடல்களுள் என்னை அதிகம் நனைத்த கடல் இலக்கியம் ,அதிலும் அதிகம் அடித்த அலை கவிதை அதிலும் அதிகம் நான் அள்ளி சுவைத்த நுரை காதல். .காதல்தான் பூமியின் வேர் என்பது எனது வாதம்.எனது இந்த சர்ச்சைக்குரிய கொள்கையின் தாக்கம் என் எழுத்துகளில் தெட்டத் தெளிவாய் தென்படும் .