•3:07 PM
கடந்துபோகும் மேகத்துக்கும்
கையசைத்து போகிறாய் ,,
உதிர்ந்து போகும் மலர்களுக்காய்
கண்ணீரும் சிந்துகிறாய்
விழி இழந்த குருடனுக்கு
வீதித்துணை ஆகிறாய்
எனை இழந்த எனையோ
வீசி எறிகிறாய்...
என் வானத்து சூரியன் நீ
என்னையே எரித்தாலும்
இரவெல்லாம் தூங்காது
உன் விடியலுக்காய் காத்திருப்பேன்
என் விரல்கள் கொண்டு
என்விழிகளை நீ குத்தினாலும்
உன் விழிப்ப் பார்வையில்
என் உலகம் கண்டிருப்பேன்
என் காதலை ஏரித்து
உன் குளிர் காய்கிறாய்
என் கண்ணீரில்
காகிதக் கப்பல் விடுகிறாய்
என் ஆறறிவை பறித்த ஆழிப் பேரலையே
எப்போதும் கசக்கின்ற துன்பத் தேனமுதே
நீ மறுத்தாலும் வெறுத்தாலும்
மறக்காது தொடர்வேன் .....
வெட்டிப் போட்டாலும்
உன் இடம் தேடிப் படர்வேன்
கையசைத்து போகிறாய் ,,
உதிர்ந்து போகும் மலர்களுக்காய்
கண்ணீரும் சிந்துகிறாய்
விழி இழந்த குருடனுக்கு
வீதித்துணை ஆகிறாய்
எனை இழந்த எனையோ
வீசி எறிகிறாய்...
என் வானத்து சூரியன் நீ
என்னையே எரித்தாலும்
இரவெல்லாம் தூங்காது
உன் விடியலுக்காய் காத்திருப்பேன்
என் விரல்கள் கொண்டு
என்விழிகளை நீ குத்தினாலும்
உன் விழிப்ப் பார்வையில்
என் உலகம் கண்டிருப்பேன்
என் காதலை ஏரித்து
உன் குளிர் காய்கிறாய்
என் கண்ணீரில்
காகிதக் கப்பல் விடுகிறாய்
என் ஆறறிவை பறித்த ஆழிப் பேரலையே
எப்போதும் கசக்கின்ற துன்பத் தேனமுதே
நீ மறுத்தாலும் வெறுத்தாலும்
மறக்காது தொடர்வேன் .....
வெட்டிப் போட்டாலும்
உன் இடம் தேடிப் படர்வேன்
0 comments: